மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்து 45 வயது மருத்துவர் தற்கொலை..!

பெங்களூரில் 45 வயது மருத்துவர் ஒருவர் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஒன்றில்  பணியாற்றி வரக்கூடிய மருத்துவர் அம்பரிஷ் விஜயராகவன், சைக்காலஜி துறை உதவிப் பேராசிரியராகவும் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல் பணிக்கு வந்து, சக மருத்துவர்களிடம் சாதாரணமாகவே பேசி சிரித்து இருந்துள்ளார். ஆனால் புதன்கிழமை அன்று இரவு 11.45 மணி அளவில் அவர் மருத்துவமனை கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனது கார் பழுதாகிவிட்டதாகவும், பழுது பார்க்க சென்றிருந்தது குறித்து அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததையும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது. அதுவே அவரை கடைசியாக பார்த்தது எனவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் இது குறித்து அவரது மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது கணவர் தன்னிடம் எதை குறித்தும் ஆலோசிக்க மாட்டார் எனவும், ஆனால் சில மாதங்களாக அவர் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து சதாசிவ நகர் காவல் துறையினர் கூறுகையில், மருத்துவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர் தற்கொலை குறித்து எந்த ஒரு தகவலும் தற்பொழுது வரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மருத்துவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த மருத்துவரின் உடல், அதன் பின் அவரது குடும்பத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது.. காங். வளாகத்தில் மன்சூர் அலிகான் பேட்டி.!

Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…

6 mins ago

சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …

17 mins ago

புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…

27 mins ago

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…

1 hour ago

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

1 hour ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

1 hour ago