#BREAKING: இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40,953 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மாநிலம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,99,130 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,59,755 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,30,288 ஆக உள்ளது. நேற்று மட்டும் 22,956 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 3,09,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.