மேற்கு வங்கத்தில், ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதா 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி அவர்கள் மே 5-ஆம் தேதி, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இவர் பெங்காலி மொழியில் 21ஆவது முதல்வராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து, ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி உட்பட மொத்தம் 17 புதிய முகங்கள் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…