காவேரி ஆற்றில் 40,000 கன அடி நீர் அதிகரிப்பு !

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 40,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. நேற்று கர்நாடக அணையில்  இருந்து தமிழக காவேரி ஆற்றிற்கு  11,280 கன அடியாக நீர் திறக்கப்பட்ட இருந்து.

இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக கபினி அணையில் இருந்து இன்று  40,000 கனஅடி நீரை தமிழக காவேரி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

author avatar
murugan