முக கவசம் அணியாமல் வந்த 400 பேரிடம் 30,000 அபராத வசூல் – சேலத்தில் அதிரடி!

முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த சேலம் வாசிகளிடம் 30,000 அபராதம் வசூல்.
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக அந்தந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு ரூபாய் 500 வீதம் அபராதம் வசூலிக்கப்படும் என ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 400 பேருக்கு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
author avatar
Rebekal