40 வயது பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி.!

கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது, பெண் காவலருக்கு கொரோனா இருப்பது உறுதி.

கோயம்பத்தூர் மாவட்டத்தில் 40 வயது பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அன்னூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் இவர், அன்னூர் மற்றும் அவிநாசி சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்த சீல் வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டபோது,அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேட்டுப்பாளையம், அன்னூர், மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, துடியலூர் ஆகிய சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள் மொத்தம் 344 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 18 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்