மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக கூறி 4 பேர் அடித்து கொலை !

மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக கூறி 4 பேர் அடித்து கொலை !

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்லா கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சில பழங்குடியினத்தைச் சேர்ந்த  குடும்பங்கள் மாந்திரீக செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து  நேற்று முன்தினம் அதிகாலை கும்பலா கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த பழங்குடி மக்கள் வசித்த வீடுகளுக்கு சென்று அவர்களை வெளியே இழுத்து போட்டு அடித்தனர்.

இந்த சம்பவத்தில் பாக்னி தேவி ,பிரிதேவி ,சூனா ஓரான் ,சாப்பா பகத் ஆகியோர் உயிர் இழந்தனர்.மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் ,மாந்திரீக செயல்ககளால்  சிலர் பாதிக்கபட்டதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர்.12 பேரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.அதில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் உயிர் இழந்து உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறினர்.

author avatar
murugan
Join our channel google news Youtube