சூரத்- மும்பைக்கு செல்லும் விமானத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு ..!

நேற்று ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நான்கு மாதபெண் குழந்தை உயிரிழந்தது.இந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு சூரத் வழியாக சென்றது. சூரத்தில் ப்ரீத்தி ஜிண்டால் என்ற பெண் அவரது நான்கு வயது ரியா என்ற குழந்தை மற்றும் ரியாவின்     தாத்தா , பாட்டி ஆகியோர் விமானத்தில் ஏறியுள்ளனர்.
அப்போது ப்ரீத்தி தனது மகள் ரியாவிற்கு அதிகாலை 5.30 மணியளவில் உணவு கொடுத்து உள்ளார்.அதன் பிறகு குழந்தை தூங்கி உள்ளது.பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.
குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டிருப்பதாகக் குடும்பத்தினர் நினைத்து கொண்டனர். பின்னர் மும்பையில் தரையிறங்கியபின் விமான டாக்ஸியில் சென்று கொண்டிருந்தபோது, ​​குழந்தை அசைவு இல்லாமல் இருந்தது .இதை உணர்ந்த குடும்பத்தினர் அவசர மருத்துவ உதவி கேட்டனர்.
இதை தொடர்ந்து விமான நிலைய மருத்துவ அறைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.அங்கு குழந்தையின் இருதய நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். குழந்தை இப்படி இறந்தது என்பது பிரேதபரிசோதனைக்கு பின் கூறமுடியும் என மருத்துவர்கள் கூறினர்.
 

author avatar
murugan