ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்…!

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையில், 4 பெரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முடிவுகள் வெளியாகியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி வத்தகவுண்டன் வலசுவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேசன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திக் ஆகிய 4 பேரும் வைக்கோல் குவிக்கப்பட்டிருந்த இடத்தில், கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், போலீசார் விவசாயி முருகேசன் குடும்பத்துடன் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனையில், 4 பெரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.