4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு.!

  • தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில் குமாருக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யாக பதவி உயர்வு, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில்குமார் சிங், சென்னை சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐ.ஜி பொறுப்பில் மதுரை காவல் துறை ஆணையராக உள்ள எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சென்னை காவலர் நலப்பிரிவு ஐ.ஜியான எஸ்.என்.சேஷசாய்க்கு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. பொறுப்பில் சென்னை சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆபாஷ்குமார் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்