- தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், ஒருவருக்கு பணியிட மாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில் குமாருக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி.யாக பதவி உயர்வு, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பியாக இருந்த சுனில்குமார் சிங், சென்னை சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஐ.ஜி பொறுப்பில் மதுரை காவல் துறை ஆணையராக உள்ள எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அதே பொறுப்பிலேயே நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சென்னை காவலர் நலப்பிரிவு ஐ.ஜியான எஸ்.என்.சேஷசாய்க்கு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவரை தொடர்ந்து ஏ.டி.ஜி.பி. பொறுப்பில் சென்னை சிறைத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆபாஷ்குமார் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.