தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ! 4 பேர் உயிரிழப்பு.!

பாகிஸ்தான்: கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக இராணுவ அறிக்கை இன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் உடலை பிராந்தியத்தில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தொழில்நுட்ப காரணங்களால் ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது என்று இராணுவத்தின் ஊடக பிரிவு இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ஒரு விமானி மற்றும் இணை விமானி, முக்கிய இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர் என்று மேற்கோளிட்டுள்ளது.
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.