சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக் கொலை – 4 பேர் கைது.!

விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கேசவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த விசிக பிரமுகரான கேசவன் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை கேசவனை மீட்டு சென்னை ஸ்டாலின் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்ததாகவும், இதுகுறித்து போலீசுக்கு கேசவன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இத்துடன் அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த கொலை நடந்துள்ளதால் மதன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கேசவன் உறவினர்கள் மதனின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் அதிகப்படியாக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது கேசவன் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்