3-வது டெஸ்ட்:இன்று கடைசி நாள் ஆட்டம் …!வெற்றிக்கு போராடும் இந்திய அணி …!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  இன்று 5 -ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு சுருண்டது.
292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதனைதொடர்ந்து, 399 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை விளையாடியது.
 

இந்நிலையில் 4 -ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 85 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் கம்மின்ஸ் 61*,லயன் 6 * ரன்களுடன் உள்ளனர்.
இந்நிலையில் இன்று 5 -ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.அதேபோல் இந்திய அணி வெற்றிபெற 2 விக்கெட்டுகள் மட்டும் தேவைப்படுகிறது.

Leave a Comment