3வது ஒருநாள் போட்டி…!இந்திய அணி பந்துவீச்சு …!மீண்டும் அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள் ..!

3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீசுகிறது.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும்,இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது.பின்னர் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது.
இந்நிலையில்  3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி வீரர்கள் விவரம் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், தோனி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பூம்ரா,கலீல்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Comment