ம. பி-யில் 37 அடி உயரமுள்ள பாரத மாதா வெண்கல சிலை.! மலர் தூவி திறந்து வைத்த முதல்வர்.!

மத்திய பிரதேசத்தில் போபாலில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலையை முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் போர் வீரர்களின் நினைவிடமான சௌர்யாவில் 37 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பாரத மாதா வெண்கல சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பூ மீது தேசிய கொடியை ஏந்தியது போன்று பாரத மாதா நிற்கும் அந்த சிலை நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி திறந்து வைத்தனர்.

அந்த பிரமாண்ட பாரத மாதா சிலையை மத்திய பிரதேச முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் நேற்றைய தினம் சுதந்திர தினத்தையொட்டி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அந்த சிலைக்கு அம்மாநில அமை‌ச்ச‌ர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.