11ம் வகுப்பு தேர்வில் 3,606 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை.!

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணி அளவில் வெளியானது. இன்று வெளியான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்னர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது:

மொத்த தேர்ச்சி விகிதம் : 90.93%
மாணவிகள் : 94.36%
மாணவர்கள் : 86.99%
மாணவர்களை விட மாணவிகள் 7.37% அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 90.93 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

100-க்கு 100 மதிப்பெண்:

11ம் வகுப்பு தேர்வில் 3,606 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். அதில் பாட வாரியாக பார்க்கையில்,

தமிழ் – 9

ஆங்கிலம் -13

இயற்பியல் – 440

வேதியியல் – 107

உயிரியல் – 65

கணிதம் – 17

தாவரவியல் -2

விலங்கியல் -34

கணினி அறிவியல் – 940

வணிகவியல் – 214

கணக்குப் பதிவியல் – 995

பொருளியியல் – 40

கணினிப் பயன்பாடுகள் – 598

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 132 பேர் என மொத்தம் 3,606 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 995 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.