தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் இல்லை ! அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் இல்லை ! அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாக மத்திய நீர்வள ஆணையம் அதிர்ச்சிகர தகவலை விடுத்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் பருவமழை பெய்யாமை ஆகிய காரணங்களால் நாடு முழுவதும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நிலத்தடி நீர் மட்டமும் அனைத்து இடங்களிலும் வெகுவாக குறைந்து விட்டது. மத்திய அரசு நிலத்தடி நீர்மட்டம் தொடர்ப்பாக நீர் வள ஆணையத்திடம் தகவல் கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் வறண்டது தெரிய வந்துள்ளது.
மேலும், 212 இடங்களில் நிலத்தடி நீரானது வெகுவாக குறைந்து விட்டதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் மொத்தம் 139 இடங்களை தேர்வு செய்து 2008 முதல் 2017 வரை இந்த ஆய்வு நடந்துள்ளது

Join our channel google news Youtube