தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட 35 வயது நபர்!
தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட 35 வயது நபர்!
உத்தர பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சதார் பஜார் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 35 வயது நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி மகேந்திர யாதவ் கூறுகையில், தற்கொலை செய்து உயிரிழந்தவர் அவரது மனைவி ரீனா, 5 வயது குழந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகிய மூவரையும் தலையணையால் நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.