11 வகுப்பில் அரியர் வைத்த 33,557 மாணவர்களும் தேர்ச்சி – அமைச்சர் அன்பில் மகேஷ்..!

11-ம் வகுப்பில் அரியர் வைத்த 33,557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிட்டார். பின்னர் செய்தியுடன் பேசி அவர், 12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி 8,16,473 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1656 பேர் தேர்ச்சி பெறவில்லை.

22 ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விரைவில் வெளியிடப்படும்.

ஏற்கனவே ஓரிரு பாடங்களில் அரியர் வைத்து இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் தேர்ச்சி. 11-ம் வகுப்பில் அரியர் வைத்த 33,557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி. இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

author avatar
murugan