#Breaking:கொரோனாவிலிருந்து நாடு முழுவதும் ஒரே நாளில் 32,542 பேர் குணமடைவு;318 பேர் இறப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 318 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,94,803 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 31,382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,35,94,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 318 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,46,368 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 32,542 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,28,48,273 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,00,162 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 84,15,18,026 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 72,20,642 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.