லட்டு தயாரிக்க திருப்பதிக்கு மதுரையிலிருந்து மாதத்திற்கு 30 டன் நெய் !

ஆந்திராவில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பிரசாதமாக  லட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த பிரசாத லட்டுகளை தயாரிப்பதற்கான நெய்யை மதுரை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது.

இது குறித்து மதுரை ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஓ .ராஜா கூறுகையில் ,திருப்பதி ஏழுமலையான் கருவறை மற்றும் லட்டு தயார் செய்ய 6 மாதத்திற்கு நெய் விநியோகம் செய்யும் டெண்டரை மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது,.

அதன் படி 15 நாள்களுக்கு ஒரு முறை 15 டன் நெய் என மாதம் 30 டன் நெய் விநியோகம் செய்ய உள்ளோம்.மேலும் திருப்பதி தேவஸ்தானத்தின் டெண்டர் கிடைத்து இருப்பது மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கிடைத்த சாதனை என கூறினார்.

author avatar
murugan