30 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

30 பிஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலவரப்பட்டி  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை  16,540 ஆக உயர்ந்துள்ளது.

பணியில் உள்ள ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு என்பது இருந்து வருகிறது.குறிப்பாக கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள்,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை என பல தரப்பு ஊழியர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது.இந்நிலையில் தான் பிஎஸ்எப் வீரர்கள் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் 6 பேருக்கும், திரிபுராவில் 24 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய சுகாதரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.