பாகிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் படுகாயம்..!

பாகிஸ்தான் நாட்டில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டம் மத்திய பாகிஸ்தானில் நடைபெற்றது. ‘இந்த கூட்டத்தில் குண்டு வெடித்துள்ளதால் இதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக’ ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வெடி குண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.  இதனையடுத்து இதில் படுகாயமடைந்த நபர்கள் சிலர் பகவால்நகர் பகுதியில் காத்திருக்கும் காட்சியும், சிலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் காட்சியும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.