இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய 3 பேருக்கு கொரோனா உறுதி.!

இங்கிலாந்தில் முதன்முதலில் வெளிவந்த புதிய வகை கொரோனா வைரஸ்  தொற்று பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு சிந்து சுகாதாரத் துறை அறிக்கையின்படி, இங்கிலாந்தில் திரும்பி வந்தவர்களின் 12 கொரோனா மாதிரிகளை சோதித்தனர். அதில், மூன்று பேருக்கு கொரோனா முதல் கட்டத்தில் வைரஸின் புதிய மாறுபாட்டை கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு குறித்த அச்சத்தில் நேற்று, இங்கிலாந்திலிருந்து வரும் விமான சேவை தடையை பாகிஸ்தான் மற்றொரு வாரத்திற்கு நீட்டித்தது.

அறிக்கையின் படி,தற்காலிக விசாக்களில் இங்கிலாந்துக்குச் சென்ற பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் கட்டுப்பாடுகளின்படி விமானத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனாபரிசோதனையைக் காட்ட வேண்டும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.