அத்திவரதரை நேற்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அத்திவரதரை நேற்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அத்திவரதர் வைபவத்தின் 29-ம் நாளான இன்று கூட்டம் சற்று குறைவாக தான் உள்ளது. அத்திவரதர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சுவாமி நின்ற திருகோலத்தில் காட்சியளிக்க உள்ளார். அதனால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மாநில நிர்வாகம் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை அதிகரிக்க முடிவு செய்து உள்ளனர்.மேலும் பல இடங்களில் குடிநீர் , கழிப்பறை வசதிகள் அதிகரிக்கவும்  முடிவு செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 28 நாள்களில் அத்திவரதரை 41 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் விடுமுறை நாளான நேற்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள்  தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.அதில் கூட்ட நெரிசலில் 33 பேர் மயக்கம் அடைந்தனர்.அவர்களுக்கு தற்காலிக  மருத்துவ முகாமில் சிகிக்சை கொடுக்கப்பட்டது.மேல் சிகிக்சைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு சென்ற 18 பேரும் இரவே வீடு திரும்பியதாக கூறப்பட்டு உள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube