அர்ஜென்டினாவுக்கு 3 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக் வி’ விநியோகம்!

அர்ஜென்டினா நாட்டிற்கு 3 லட்சம் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்துகளை அந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்- V மற்றும் ஃபைசர் தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.

தற்பொழுது உலகளவில் பல நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கிய நிலையில், பல நாடுகள் தடுப்பு மருந்துகளை ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், ரஷியாவின் “ஸ்புட்னிக்-V” கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்க நாடான அர்ஜென்டினாக்கு அந்நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.மொத்தமாக 3 லட்சம் டோஸ்களை கொள்முதல் செய்துள்ளதாகவும், கொரோனா தடுப்பு மருந்தில் மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.