#BREAKING: பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியின் தாளாளா் ஜோதிமுருகன் மீது மாணவிகள் பாலியல் புகாா் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தாளாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் ஈடுபட்டனா். போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜோதிமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். 2 நாள்கள் மாணவா்கள் நடத்திய போராட்டத்துக்குப் பின் அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த சனிக்கிழமை சீல் வைத்தது. விடுதியில் தங்கியிருந்த மாணவா்களும் சொந்த ஊா்களுக்கு சென்றனா்.

இதனைத் தொடர்ந்து தலைமறைவான ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜோதிமுருகன், திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

ஜோதிமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் ஜோதிமுருகனை ஆஜர்படுத்த கோரி திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், திங்கள்கிழமை காலை ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan