குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பலி..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள ஒரத்தி எனும் பகுதியை சேர்ந்தவர்கள், தர்ஷன் (8), ஆகாஷ் (11) மற்றும் எலியா (10). இவர்கள் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய இவர்கள், அருகிலுள்ள குளத்தில் குளிக்க சென்றனர். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் அவரை தேடி வந்தனர்.

குளக்கரை அருகே பார்த்தபோது அவர்கள் அணிந்த துணி இருந்தது. சந்தேகமடைந்த அவர்கள் குளத்திற்குள் இறங்கி பார்த்தனர். அப்பொழுது அந்த சிறுவர்கள் குளத்தில் மூழ்கி சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.