லக்னோவில் 258 ஆமைகளுடன் 3 பேர் கைது..!

உத்தரபிரதேசம் லக்னோவில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 258 ஆமைகளுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மீனவர்களுக்கு பணம் கொடுத்து ஆமைகளை பிடிக்கச்சொல்லி பிற மாநிலங்களில் அதிக விலைக்கு விற்று வந்த கும்பல் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ₹2,460 ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை எஸ்டிஎஃப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

author avatar
subas vanchi