டெல்லியில் கொரோனா 2 ம் அலையின் உச்சம் – முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா 2 ம் அலையின் உச்சம் – முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டெல்லியில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் உச்சத்தை கடந்துவிட்டதாகவும், ஆனால் நிலைமை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், டெல்லி அரசு தொற்றுநோயை வேகமாகக் கண்டறியும் சோதனையை அதிகரித்ததாக கெஜ்ரிவால் கூறினார். கடந்த செப்டம்பர் -17 ம் தேதி நகரம் முழுவதும் 4,500 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. இதனை, இரண்டாவது அலையின் உச்சத்தை தாக்கியதாகவும் நிலைமை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இரண்டாவது அலை மெதுவாக கடந்து செல்லும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube