Categories: Uncategory

தூத்துக்குடியில் 2 கோயில்களில் திருட்டு

தூத்துக்குடியில் இரண்டு கோயில்களில் பூட்டை உடைத்து அம்மன் தாலிச் சங்கிலி மற்றும் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதாநகரில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்ற நிலையில்,  வழக்கம்போல் பூஜை முடிந்ததும் செவ்வாய்க்கிழமை இரவு கோயிலை பூட்டிச் சென்றனர். கோயில் அர்ச்சகர் புதன்கிழமை காலை பூஜை செய்ய கோயிலுக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தெரியவந்தது.  மேலும்,  அம்மன் சிலையில் இருந்த 4 பவுன் அம்மன் பொட்டு தாலி மற்றும் கோயில் பூஜை பொருள்கள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதேபோல்,  தாளமுத்துநகர் 2ஆவது தெருவில் உள்ள உச்சினிமாகாளி கோயிலிலும் மர்ம நபர்கள் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சில்வர் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் உண்டியலில் அதிக தொகை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Castro Murugan
Tags: #Thoothukudi

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

3 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

5 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

7 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

8 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

8 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

8 hours ago