லெபனான் வெடிவிபத்து: 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்டால்..73 பேர்உயிரிழப்பு.. 3,700 பேர் காயம்..!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்து, பெய்ரூட் நகரையே உலுக்கியது. இந்த விபத்தில் குறைந்தது 73 பேர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் 3,700 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார். தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வைத்திருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் விபத்துக்கு காரணமானவர்களுக்கு  தண்டனை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

author avatar
murugan