சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி-காவல்த்துறை

விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும்  சிறப்பாக கொண்டாடப்படும்.அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற செப்டம்பர் 2-ஆம் தேதி கொண்டாப்படுகிறது.இதற்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை காவல்த்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது,    சென்னையில் இதுவரை 2600 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காவல்த்துறையின் அனுமதியோடு, 2700 சிலைகள் வைக்கப்பட்டது . பதட்டமான பகுதிகள் கண்டறியப்பட்டு, தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று  சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.