அறநிலையத்துறையில் காலியாக உள்ள 25,000 பணியிடங்கள் நிரப்பப்படும்- ஸ்டாலின் வாக்குறுதி ..!

கொரனோ பேரிடர் நிதியைக் கூட முழுமையாக மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, கொரனோ பேரிடர் நிதியைக் கூட முழுமையாக வழங்கவில்லை மத்திய பாஜக அரசு, அதிமுக பாஜக கொள்ளை திட்டத்தை கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும்.

அறநிலையத்துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். உத்திரமேரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் எனவும்  காஞ்சிபுரத்தில் காகித ஆலை, சிப்காட், தொழிற்பேட்டை தொடங்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வு இந்தியைத் திணிக்கும் பாஜகவின் மோடி மஸ்தான் வேலைகள் பெரியார் மண்ணில் எடுபடாது என தெரிவித்தார்.

author avatar
murugan