ஹரியானா: பள்ளி மேல்கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்களுக்கு காயம்..!

ஹரியானாவின் சோனிப்பேட்டில் உள்ள பள்ளியில், மேல் கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹரியானாவின் சோனிப்பேட்டில் உள்ள பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் சோனிப்பேட்டில் உள்ள கானூரில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கிய மாணவர்கள் தற்போது கானூர் சமூக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் ஐந்து மாணவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் மற்றும் அவர்கள் கான்பூரில் உள்ள பிஜிஐக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.