டெல்லி ஆட்டோ டிரைவர் வீட்டில் இருந்து 25 லட்சம் திருட்டு

டெல்லி ஆட்டோ டிரைவர் வீட்டில் இருந்து 25 லட்சம் திருட்டு

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது வீட்டில் நடந்த விபரீதம்!

டெல்லியில் ஆட்டோ டிரைவர் வீட்டில்  கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சென்றபோது  திருட்டு நடந்துள்ளது,  வடகிழக்கு டெல்லியின் சிவ் விஹார் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்குமார் வசித்து வருகிறார், அவர் தன் மனைவியுடன் கொரோன தடுப்பூசி போடுவதற்கு சென்றுள்ளார். இந்தசூழலை பயன்படுத்திக்கொண்டு கொள்ளையர்கள் ஆட்டோ ஓட்டுனரின் வீட்டை சூரையாடியுள்ளதாக போலீஸ் தெறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அரவிந்த்குமார் பட்வா (40), செவ்வாய்க்கிழமை, தடுப்பூசி போடுவதற்காக புதன்கிழமை காலை 10 மணியளவில், அவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் தனது குழந்தைகளை உஸ்மான்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் இறக்கிவிட்டு, தனது மனைவியுடன் லக்ஷ்மி நகருக்குச் சென்றுள்ளார்.

பிற்பகல் 3 மணியளவில் அவர் தனது வீட்டிற்கு திரும்பியபோது, ​​வீட்டு கதவு திறந்திருப்பதைக் கண்டார். அவர் வீட்டிற்குள் நுழைந்தபோது அலமாறி திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கொள்ளையர்கள் அதில் உள்ள 25 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொல்லையடித்துவிட்டு சென்றுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருவதாக டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

Join our channel google news Youtube