விபத்து…! பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 25 பேர் காயம்….
விபத்து…! பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் 25 பேர் காயம்….
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இருந்து ராஜ்கோட் செல்லும் பேருந்து, உஜ்ஜயினியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புகி மாதா பைபாஸில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது விழுந்ததில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக அந்த மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இப்பொது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேருந்து ஓட்டுநர் மீது, இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.