சொதப்பல் ஆட்டம்..! 242 ரன்னில் ஆல் அவுட் ..! இந்திய அணிக்கு என்ன ஆச்சு..?

இந்திய அணி , நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் இந்திய அணி 63 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இந்திய அணியில் பிருத்வி ஷா,  புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய மூன்று பேரும் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில்  வெளியேறினர்.

author avatar
Dinasuvadu desk