சென்னையில் கொரோனா தாக்கத்தால் 24 மணிநேரத்தில் 22 பேர் உயிரிழப்பு..!

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கதால் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து.

சென்னையில் கொரோனாவில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் நேற்று 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பெரும், ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் 4 பெரும், கீழ்பாக்கம் மருத்துவமனையில் 2 பெரும், ராயப்பேட்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.