மகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழப்பு!

Default Image

மகாராஷ்டிராவில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,448 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் அங்கு இன்று ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,30,599 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,667 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,067 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,27,259 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 93,652 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Join our channel google news Youtube