இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம்

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே ஆலோசனை நடைபெற்றது.இதில் ட்ரம்ப் மற்றும் மோடி முன்னிலையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவின் அப்பச்சி ,ரோமியோ ஹெலிகாப்டர்கள்  ராணுவ ஆயுதங்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.