சிங்கம் சிங்கிளாதான் வரும்! மேஜிக் சிம்பல் எங்களிடம் உள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எங்கள் தலைமையில் சில கட்சிகளுடன் இணைந்து மக்களை சந்திக்க உள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், கூட்டணியிலிருந்து பாஜக விலகியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தனித்து போட்டியிடும் என்றும் உள்ளட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து … Read more

மக்களின் கவனத்திற்கு இந்தந்த வங்கியில் நாளை முதல் முக்கிய மாற்றங்கள் .. முழு விவரம் இதோ ..!

நாளை முதல் பேங்க் ஆஃப் பரோடா , பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள்  நாளை (பிப்ரவரி 1) முதல் மாறுகின்றன. இந்த புதிய விதிகள் ஒரு சாமானியனின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். பிப்ரவரி 1, 2022 முதல் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய … Read more

#BREAKING: 1,650 பறக்கும் படைகள் அமைப்பு – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 1,650 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்கள் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. ஒரு மாநகராட்சி ஒரு … Read more

#BREAKING: சென்னை மாநகராட்சி – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தேமுதிக!

நகர்ப்புற உள்ளாட்சியில் சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது தேமுதிக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் நிலையில், திருப்பூரை தொடர்ந்து சென்னைக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக திருப்பூர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் போட்டியிடும் … Read more

ரேஷன் கடை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!

அரிசி கடத்தல் போன்ற செயல்களில்  ஈடுபட்டால்  பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் ரேஷன் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். குற்ற வழக்கு தொடரப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என தெரிவித்தார். முடிச்சூரில் ரேஷன் அரிசியை வேனில் கடத்த முயன்றபோது விற்பனையாளர் கோமதி கைது செய்யப்பட்டார். விற்பனையாளர் கோமதி இடைநீக்கம் செய்யப்பட்ட … Read more

தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை? – மாநில் தேர்தல் ஆணையம் முடிவு!

தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் … Read more

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: 10 நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் கமல்ஹாசன்..!

அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 10 நாட்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து,  அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் … Read more

நாளை முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத்துறை!

நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர்  முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் (நாளை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என … Read more

#BREAKING: 5 மாநில தேர்தல்: பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு..!

பிப்ரவரி 11 வரை ஊர்வலம், மிதிவண்டி பேரணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் … Read more

#BREAKING: தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது..!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணியில் போட்டியிடக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், சில கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் … Read more