நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான தடத்தை பதிவு செய்துள்ளார் – பிரதமர் மோடி இரங்கல்

பிரணாப் முகர்ஜி மறைவிற்கு  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இந்நிலையில் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு  பிரதமர் … Read more

#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,956 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில்,கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை … Read more

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் இரங்கல்.!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணத்தை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது என ராம் நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து … Read more

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1,391 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1,19,626 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,224 பேர் … Read more

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம்.!

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை அறிக்கையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் பிசியோதெரபி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஐசியூவில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்காக வாங்கும் சம்பளம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் காமெடியனாக களமிறங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கமர்ஷியல் … Read more

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் தற்போது, … Read more

#BIG BREAKING: பிரணாப் முகர்ஜி காலமானார்..!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து பிராணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து தகவல் தெரிவித்து வந்த நிலையில், … Read more

கொரோனாவை எப்படி கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு முதல்வர் பழனிசாமி அரசுக்கு தான் கிடைக்கும் – மு.க.ஸ்டாலின்

“கொரோனா நோய்த்தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான ‘முதல் பரிசு’ தமிழகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசுக்கே கிடைக்கும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கை மீண்டும் 30.9.2020 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி, நேற்றைய தினம் (30.8.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொய்களையும்’ ‘புரட்டுகளையும்’ பட்டியலிட்டு – மார்ச் மாதத்திலிருந்து சுமார் 6 மாத காலமாகத் தமிழக மக்கள் படும் வேதனைகளையும், சோதனைகளையும் மிகவும் குறைத்து … Read more

விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல – ஹர்திப் சிங் பூரி!

விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல என்று விமான போக்குவரற்றது துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறியுள்ளார். விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு ஏர் இந்தியா விமானம் குறித்து பேசினார். அப்பொழுது அவர் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் சொத்து என குறிப்பிட்டார். அதற்காக விமானங்களையும் விமான நிலையங்களையும் இயக்குவதற்கான சேவையை அரசு வழங்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா தனியார் … Read more