திருப்பதியில் செய்தி சேகரிக்க சென்ற தமிழ் ஊடகத்தினரை புறக்கணித்த தேவஸ்தானம் நிர்வாகம்..!

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் கூட்டம், மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் என மாதம் இரண்டு முறை கூடும். இந்த கூட்டத்தில் பக்தர்களின் முறையீடுகள் போன்றவற்றை பற்றி விவாதிக்கப்படும். இந்நிலையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தமிழக ஊடகத்தினரை உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தியுள்ளார். அரங்க கூட்டங்கள் உட்பட அனைத்துக்கும் தெலுங்கு, ஆங்கில மீடியாக்கள், செய்தித்தாள்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழக செய்தித்தாள், மீடியாக்களுக்கு இனி அனுமதியில்லை என்று கூறியுள்ளார். இதனால் கூட்டம் முடியும் … Read more

விரைவில் இந்திய சாலையில் செல்லவுள்ள டோமினார் 250.. எதிர்பார்ப்பில் பல்சர் ரசிகர்கள்!

பல்சர் ரக பைக் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது, பஜாஜ் நிறுவனம். இந்த நிறுவனம் 2016ஆம் ஆண்டு தனது 400 சிசி பைக்கான டோமினார் 400 ரக பைக்கை அறிமுகம் செய்தது. டோமினார், பஜாஜ் நிறுவனத்தின் அதிக சக்தி வாய்ந்த பைக்காக விளங்குகிறது. குறிப்பாக இந்த பைக்கை லாங்கு ரைடு (Long ride) செல்வோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆரம்பத்தில் இதன் விலை 1.36 லட்சமானாலும், தற்பொழுது இந்த பைக்கின் விலை 1.90 லட்சமாகும். … Read more

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி..! வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில், நடிகர் சாந்தனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயரித்துள்ளது  மேலும் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தளபதி விஜய்க்கு கன்னத்தில் முத்தம் … Read more

மலேசியாவின் புதிய பிரதமராக நாளை பொறுப்பேற்க உள்ள மொகைதீன் யாசின்..!

மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது கடந்த 24-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார்.  பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார். இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பணியாற்றினார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மகாதீருக்கு … Read more

மாதவராத்தில் பற்றி எரியும் தீ ! தீயை அணைக்க 500 வீரர்கள் போராட்டம்

மாதவராத்தில்  ஏற்பட்டுள்ள தீ விபத்தை அணைக்க 3 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.  சென்னையில் உள்ள மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 15 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 20மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில்,500 வீரர்கள் … Read more

வைரல் வீடியோ: ஒரு புறாவால் விமானம் 30 நிமிடங்கள் தாமதம்..!

அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கோ-ஏர் பயணிகள் விமானம்இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது. விமானம் தாமதமாக காரணம்  புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைத்தது. This is literally “bird flying” in the giant bird!!!! Flight from Ahmedabad to Jaipur..held up for 30 mins!!@goairlinesindia “pigeon” on board!!! pic.twitter.com/nbIdswXey7 — Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) February 29, 2020 … Read more

ஆசியகோப்பை எங்கு நடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை -ஈசான் மணி..!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் ஈசான் மணி செய்தியாளர்களை சந்தித்தபோது , ஆசிய கோப்பை போட்டி எங்கு நடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார். ஆசியக்கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும். ஈரானில் கொரோனோ வைரஸ் இருப்பதால் ஆசிய கோப்பை போட்டியை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும். அதற்குள் கொரோனா வைரஸ் குறைந்து விடும் என நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் அதற்குக்கேற்றாற்போல தயாராக வேண்டும் என கூறினார்.மேலும் … Read more

இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத ஸ்டாலின் ! சோகத்தில் தொண்டர்கள்

 திமுக எம்எல்ஏவான, காத்தவராயன் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துக்கம் தாங்காமல் அழுது விட்டார்.  2 நாட்களில் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர்.இதன்விளைவாக இன்று நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் துக்கம் தாங்காமல் … Read more

பார்க்கிங் ஸ்லாட் எங்குள்ளது? இனி கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்!

பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்கு பார்க் செய்யலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, கூகுள் மேப்ஸ் ஒரு புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது. கூகுள் மேப்ஸ் மூலம் அங்கு பார்க்கிங் … Read more

3 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகன்.! இன்று ரயில் முன் பாய்ந்த தாய், தந்தை.!

கரூர் அருகே உள்ள சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்த சேகர் என்பவர் அப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களது மகன் பாலச்சந்தர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அன்றிலிருந்து கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கரூர் திண்டுக்கல் இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை சடலத்தை … Read more