கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனையடுத்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் அவரது உறவினர் மேகநாதன், லாரி டிரைவர் மனோஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் குற்றப்பத்திரிகையை தயாரித்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை பெற ஜெயகோபால் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.ஆனால் ஜெயகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விசாரணை 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20…
ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…
Election2024 : இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…
Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…