2019 ஐபிஎல் தொடர்:முதல் போட்டியில் சென்னை சிங்கங்களுடன் மோதும் பெங்களூர் அணி!!

  • 12-வது ஐபிஎல் தொடர் 2019 மார்ச் மாதம் 23ம் தேதி முதல்  தொடங்குகிறது 
  • முதல் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுர் அணிகள் மோதுகின்றது.

முதல் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுர் அணிகள் மோதுகின்றது.

ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

இந்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிறங்க  அணிகள் வீரர்களை ஏலம் எடுத்தது.

அதேபோல்  12வது ஐபிஎல் தொடர் 2019 மார்ச் மாதம் 23ம் தேதி முதல்  தொடங்கும் என்று  ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்தது.12வது ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில்  ஐ.பி.எல் 2019-ஆம் ஆண்டின் முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது  ஐ.பி.எல் நிர்வாகம்.முதல் போட்டியில் சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களுர் அணிகள் மோதுகின்றது.முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment