2019 தேர்தல்..இவர்தான் போட்டியிட வேண்டும் ! மோடி விருப்பம்..!

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இவர்தான் போட்டியிட வேண்டும் என மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த மக்களவை தேர்தலில் அத்வானி குஜராத், காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு பின் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார். அவர் எந்த விழாவிற்கு சென்ற போதும் பாஜகவினர் அவரை பெரிதாக மதிக்கவில்லை. மேலும் கட்சியிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை. அத்வானியை போலவே பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.Image result for modi with amithsha

இந்நிலையில் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலின் போது இது தளர்த்தப்பட்டு முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டார்.  இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த கடந்த இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும் பல்வேறு காரணங்களால் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிவ சேனா ஆகியவை பாஜகவுடன் இனி கூட்டணி  இல்லை என அறிவித்து விட்டன.Image result for modi with advani

இநிலையில் டெல்லியில் அத்வானியை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்து  தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் நெருக்கடியில் உள்ள  பாஜக, அத்வானி, மற்றும் ஜோஷி ஆகிய மூத்த தலைவர்கள் போட்டியிடும்போது வெற்றி வாய்ப்புகள் சாதகமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Image result for modi with joshi

author avatar
Dinasuvadu desk

Leave a Comment