கன்னியாகுமரியில் மீனவர் பலி

கன்னியாகுமரியில் குளச்சல் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் பாபு ஒகி புயலால் ஏற்பட்ட அதி வேக காற்றின் காரணமாக படகில் இருந்து தவறிவிழுந்து இறந்தார் .ஒகி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பல இன்னல்களை சந்தித்து வருகிறது

குமரி மாவட்டத்திற்க்கு அவசர எண்கள்

ஒகி புயலால் கடும் பாதிப்பை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்து வருகிறது இதனால் மாவட்ட நிர்வாகம் அவசர எண்களை அறிவித்துள்ளது 1077 ,0465-2231077,9442480028,9445008139  

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

  வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அம்பாசமுத்திரம் சுற்றுப்பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பதிவாகி வருகிறது. இதனால், கடனாநதி அணை, முழு கொள்ளளவான 85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 600 கனஅடி தண்ணீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. பாபநாசத்தில் உள்ள 143 அடி கொள்ளளவு கொண்ட காரையார் அணையின் நீர்மட்டம் 109 அடியாக அதிகரித்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை, 91 … Read more

ஒகி புயல் காரணமாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை…!

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார். கனமழை காரணமாக தற்போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும்,மேலும் அங்கு ஒகி புயல் காற்று காரணமாக சுமார் 60 தென்னை மரங்கள் கிழே விழுந்துவிட்டது எனவும் தகவல் தெரிவிக்கின்றன இதே போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஓகி புயலை அடுத்து தமிழகத்தை நோக்கி வரும் சாகர் புயல்

ஓகி புயலை அடுத்து தமிழகத்தை நோக்கி சாகர் புயல் வரும் எனவும் இந்த சாகர் புயலால் வரும் 3-ம் தேதி முதல் சென்னை,கடலூர்,நாகைபட்டினம் உள்ளிட்ட வடகடலோர பகுதிகளில் பெருமழை பெய்யும் என வானிலையாளர்கள் கணித்துள்ளனர்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை சிக்குமா பெரும் புள்ளிகள்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. கந்துவட்டி வழக்கு பதிந்துள்ள அன்புச்செழியன் அலுவலகத்தில் ஆவணங்களை தேடி வருகின்றனர் காவல்துறையினர்.ஏற்கனவே பிடியாணை பிறப்பித்து அன்புச்செழியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சோதனையின் பொது கிடைத்த ஆவணங்களில் பல பெரிய புள்ளிகள் சிக்கும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியகுமாறி முழுவதும் பவர்கட்

ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சாலை போக்குவரத்தும் பாதிக்கபட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவரவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என திமுகவின் குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

பேனர் விவகாரம் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ஸ்டாலின்

சாலையோரங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. திமுக சார்பில் தொடர்ந்த இந்த வழக்கின் மூலம் பேனர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2.O திரைப்படத்தை கைப்பற்றிய அமேஸான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இணைந்திருக்கும் படம் 2.O இப்படம் இந்தியாவிலேயே பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் அக்சாய்குமார், எமிஜாக்சன் உடன் நடிக்கின்றனர். இப்படம்டி ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்கபடுகிறது. இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்கிரீனிங் உரிமையை அமேசன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.