20,000 வேலையற்ற இளைஞர்களுக்கு மார்ச் 2021 க்குள் வேலை – ஜார்கண்ட் முதல்வர்

20,000 வேலையற்ற இளைஞர்களுக்கு மார்ச் 2021 க்குள் வேலை – ஜார்கண்ட் முதல்வர்

மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

மார்ச் 2021 க்குள் மாநிலத்தின் 10 முதல் 15 ஆயிரம் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். தும்கா மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்ற போது, அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தொற்றுநோய்க்கு மத்தியில் வெள்ளையினமை பிரச்சனைக்கு தீர்வு காண்பது அரசாங்கத்தின் முன்னுரிமை. புதிய ஆண்டின் விடியல் வேலையற்றோரின் முகத்தில் ஒரு புன்னகை தரும் என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது இது ஒரு கடினமான நேரம். ஆனால் பிப்ரவரி அல்லது மார்ச் 21க்குள் வேலைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவரும், மாநிலங்களவை எம்.பி-மான தீபக் பிரகாஷ் ஹேமந்த் சோரனின் அரசாங்கம் ஜார்கண்டில் இளைஞர்களையும், வேலையற்ற மக்களையும் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube