இந்தாண்டு ஜம்மு-காஷ்மீரில் 200 தீவிரவாதிகள் சுட்டு கொலை.!

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் இந்தாண்டு 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் நிலையில், நேற்றைய தினம் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளுடன் இணைந்து ஸ்ரீநகர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அதில், சயிஃபுல்லா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவன் சுட்டு கொல்லப்பட்டதாக கூறிய டிஜிபி தில்பக் சிங், இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினரால் 200 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு அளித்த தரவுகள் கூறுவதாக தெரிவித்தார். அதில், பெரும்பாலானோர் புல்வாமா தாக்குதலில் தான் சுட்டுக்‌ கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.